புதுக்கோட்டைப் பகுதிகளைப் பாடும் இலக்கியங்கள் வரிசை – 12
வெள்ளாற்றுச் சருக்கம் – திருப்பெருந்துறைப் புராணம். @அண்டனூர் சுரா சுந்தரலிங்க முனிவர் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம் புதுக்கோட்டை நிலப்பகுதியைப் பாடும் முக்கியமான புராணம் ஆகும். இந்தப் புராணம் மற்றும் இதை இயற்றியவர் குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன். முந்தைய பதிவின் தொடர்ச்சியாக வெள்ளாற்றை பாடும் வெள்ளாற்றுச் சருக்கம் குறித்து இந்தப் பதிவில் எழுதுகிறேன். வெள்ளாற்றுச் சருக்கம் திருப்பெருந்துறை புராணம் கதையில் 42 ஆவது சருக்கமாக வெள்ளாற்றுச் சருக்கம் பாடப்பட்டுள்ளது. சுவேதகேது என்னும் பாண்டிய மன்னன் நாட்டின் வளங்களைக் காண சுற்றி வருகிறான். இவன் செங்கோன்மையும் சிவநெறியும் கொண்டு வாழ்ந்துவருகிறவன். அப்படியாக வலம் பொழுது சோழ நாட்டு பொன்னி நதியைப் போல ஒரு நதியும் பாண்டிய நாட்டில் இல்லையே என்று கவலை கொள்கிறான். சோழ நாட்டு பொன்னி நதியைப் போல வெள்ளாற்றையும் பெருக்கெடுக்கச் செய்ய விரும்புகிறான். தனது ஆட்சிப் பொறுப்பை அமைச்சனிடம் ஒப்புவித்துத் தான் இமயம் சென்று கடும்தவம் புரிகிறான். மன்னின் தவத்தைப் பார்த்த பிரமன் பாண்டியனின் விருப்பதை உணர்ந்து ஒரு தெய்வ நதியை ப...